Monday, July 20, 2009

யமுனை


யமுனை நதியோடு
ஒத்த நிலைபாடு
கொண்ட பெண்ணவளே !!

நீ நித்தம் சலிக்காமல்
ஓடும் ஓட்டத்தில்
புனிதம் பெற்றிடாய் !!

படர்ந்த எண்ணத்தில்
வழிகள் அத்தனையும்
பூஞ்சோலை ஆக்கிட்டாய் !!

பகிர்ந்து வாழ்வதில்
பகைவர்தம் கூட
நண்பர் என வந்தார் !!

தமிழன் கோட்பாட்டை
வாழ்கை நெறியாக்கி
பண்பின் அறம் நின்றாய் !!

1 comment: