Wednesday, July 15, 2009

பயணம்


அதி காலை கண் விழித்த வேளை
என்னுள் படர்ந்த இன்பம்
அதை சொல்லவே இந்த பயணம்!!

உள் வாங்கிய மூச்சில் குளுமை அதிகம்
என் உள்ளத்தில் எழுந்த வாக்கியங்களும் -
அதில் அடங்கும்!!

வெளிப்புற தென்றல் என் தலைமுடியினை -
காதலோடு கோதிச்செல்ல !
கமலமாய் மலர்ந்த கண்கள் -
போதையில் தள்ளாட !
வண்ணத்து பூச்சியின் நடன அரங்கேற்றம்
கண்முன்னே ஆனந்தமாய்!!

வானின் விருந்திற்கு மேகங்கள் எல்லாம் -
வேகமாய் செல்ல !
ஒவ்வொரு நிமிடமும் பல கோலங்கள் -
வானவேடிகையாக !
நிகழ்ந்த மாற்றத்தின் அற்புத படைப்பாய் -
மழையவள் தூறிட்டாள் l!!

உச்சகட்ட அழகிய காட்சி -
பூமித்தாய் நிகழ்திட்டாள் !
மண்ணில் இருந்து -
பிறந்த வாசம் !
மன்னவள் ஈன்று எடுத்த -
பிள்ளை பாசம் !
என்னுளும் பயணித்த -
இன்ப வாசம்!!

நிலை மறந்த என்னை - நான்
உணர்ந்திட !
இடியவன் இடித்திடான் -
உணர்வினை மீட்டு எடுத்தான் !
இனிய நினைவுகள் -
உள்ளம் மகிழ!!

2 comments:

  1. while i reading this poem.. i felt as traveling with my past memories... Nice poem..

    ReplyDelete