Thursday, September 17, 2009

‘அப்பா’



நான் மண்ணில் கண்மலர
என் தாயின் பொன்முகத்தில்
சிந்தும் பொன்சிரிப்பின் சொந்தமாய்
தாயின் மருமுகமாய் தந்தை என்று
இருவரும் ஒரு உருவாய் என் முன்னே
தோன்றிடும் சிவசக்தி !!!

சுடும் நெருபென்று கூரி
புத்திக்கு படும் முறைதனில்
பாடம் பயில்வித்த பண்டிதர் !!!

காற்றின் தரம் கண்டு
நீ செல்லும் வழி தன்னில்
இடி கூடிய மழையுண்டு என்று
அறிவுறுத்தும் அனுபவத்தின் அறிவுச்சுடர் !!!

பிள்ளை நான் விழுகின்ற பொது
படும் வலி தனை
அவர் மனதினில் தாங்கி
என் கையுன்றி நான் எழ
தன் கைகளை படியாக்கிடும்
தாய்மையின் மருபெயராம் தந்தை !!!

தவழும் பிள்ளை தனை
தாங்கும் நிலமாக
வளரும் பிள்ளை நான்
நல்வழிகள் அறிந்து நலம்வாழ
துணை நிற்கும் குருவானவர் !!!

‘அப்பா’ கடல்தாண்டிய பின்
வெளி வரும் பெருமூச்சின் ஒரு வார்த்தை
என் ஜீவனில் கலந்து இருக்கும் முதல் வார்த்தை
அன்னையின் செரிபாதியாய் தந்தை – உன்பெருமை
சொல்வதற்கு இல்லை இங்கு வார்த்தை !!!

Wednesday, September 16, 2009

அழகு


சல சல வென ஓடும் நதியினில்
மோதும் அலைகளில் -
பிறக்கும் இசைதனில்
நான் துளைந்தேன் !!!

பறக்கும் மயில் -
இசைக்கும் குயில்
என கவிதைகள் மலரும் பகல்
அதிகாலையில் நான் ரசித்தேன் !!!

நதியின் வளைவினில்
பூக்கும் மலர்களில்
காற்றின் காதலை
பிறக்கும் தென்றலின் -
குளுமையில் நான் உணர்ந்தேன் !!!

எழும் சூரியனில்
விழும் ஒளிதனில்
மலரும் பூக்களின் மனம்தனில்
நான் மலர்ந்தேன் !!!

நதியின் எதிரினில்
நீந்தும் மீன்களின் அசைவினில்
நாட்டியம் நான் பயின்றேன் !!!

Monday, September 14, 2009

காதலி


பாறையின் பிரதிபலிப்பாய் என் இதயம்தனில் -
தண்ணீரின் நாடிதனை காண்பித்தவள் !!
எரிமலையின் சீற்றமாய் என் மூச்சினில் -
தென்றலின் வருடலாய் வசீகரித்தவள் !!
என்னுள் எழுகின்ற தேடல்களின் -
பொக்கிச புதையலாய் விடைதருபவள் !!
என்னுள் என்னுயிராய் என் சுவாசத்தில் கலந்திருப்பவள் -
என் இனிய இதயத்தின் துடிப்பானவள் - என்னவள் !!
என் இனிய காதலி -
மை லிட்டில் ஸ்வீட் ஹார்ட் -!!!