Sunday, July 22, 2012

மறுபடியும்

என்னவளின் நினைவுகளும்
வானவனின் நிலவும் ஒன்றுதான்
இரண்டுமே தேய்ந்து மறைந்து
மீண்டும் வளர்ந்து மலர்கிறது
மறுபடியும் . . . . . . . . !!

ஆலமரம்

கதிரவன் கண் மலரும்
    பொன்வான ஒளியின் கீழ்
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும்
     நதியோர கரையோரம் !!
காதலால் வருடாமல் வருடி செல்லும்
    காற்றில் மெருகேற்றிய இசையின் கீதம் !!
வரும் திசை நோக்கிய பாதையில்
     சூரியனும் ஒளிகூட்ட
பலகிளைகள் தாலாட்ட
    பல பறவைகள் இசை மீட்ட
பல கைகள் மன்புதைந்து
   வான் தொட உயர்ந்து நிற்கும்
 ஆலமரம் !!

என் நினைவு தொட
என் உணர்வுக்கு எட்டும் உவமையாய்
என் அம்மை அப்பனே !!

கலாச்சாரம்

அன்பும் பண்பும்
நிறைந்த காதலாய் !!

இயற்கையின் மாற்றத்திற்கு
ஏற்ப வளைந்து - சுழற்சிக்கு
ஏற்ப மலர்ந்து  - உற்ற
காலத்தில் கனிந்து !!

மனித குலம் நிமிர்ந்து நிற்க
ஆணிவேராய் நம் கலாச்சாரம் !!