Thursday, August 27, 2009

புதியதாய் பிறந்தேன்


தினம் தினம் காலை
கண் திறக்கும் வேளை
புதிதாய் தான் பிறந்தேன் !!!

விடை பெற்று சென்ற சிரிப்பினை
விலை கொடுத்து வாங்கி
வழிய சிரிக்கும் வேலையாய் ஐ.டி !!!

மனிதன் எனும் போர்வையில்
மலரும் இயந்திரமாய்
குடும்ப சூழலிற்காக
வாசமற்ற மலர்களாய் !!!

என்றாவது நம் வாழ்கையிலும்
விடியலாய் நாட்கள் வரும்
என்ற தொலைநோக்கு பார்வையில்
துளைந்திடும் ப்ரொபெஸ்நல்ஸ் !!!

இதுவும் கடந்து போகும்
என்ற வாக்கியத்தை ஓடவிட்டு
வாழ்கையின் ஓட்டமும் தொடர்கிறது
வினாக்களின் விடையும் தொடர்கதையாய்
முடிவின்றி எடை கூடி தான் சுமக்கிறோம் !!!

முடிவில் படுக்கையில் என் பிராத்தனை
இறைவா மரண வரம்தா !!
இறந்தேன் அணைத்து வழிகளும் புதைய
மீண்டும் பிறந்தேன் மறுமுறை - புதிதாய்
வாழ்கை பயணத்தில் தொடர்கின்றேன்
மறுமுறை எழாத மரணம் வரும் வரை
தேடல்களோடே ஒவ்வொரு நாளும்
புதியதாய் தான் பிறந்தேன் !!!

Friday, August 14, 2009

சுதந்திர திருநாள்


தாகம் துறந்து -
தியாகம் செய்து
ஜீவன் சுமந்து -
ஜீரணித்த நாட்கள் !!

உயிரும் துட்சமாய்
பிறப்பினை பயிரிட்டு -
இறப்பினை சுதந்திர பாலாக்கி
விழுந்த விதைகளின் -
சுதந்திர விருச்சத்திற்கும் !!

நிழல் நாடி நாம் செல்ல
நிஜமான இந்திய மண்ணிற்கும்!!

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
என்ற சொல்லிற்கு கனியாய் கனிந்து
அமுதாய் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கும் !!

மனதார உணர்வுகள் உள்ளம் மகிழ
எழுந்த திருநாளாம் சுதந்திர திருநாள் !!

தாய் தந்த பாலிற்கும்
தாய்நாடிட்ட சோற்றுக்கும்
கடைசி மூச்சில்
எரியும் நொடி வரை
என்றும் நன்றி கலந்தே இருக்கும் !!

Wednesday, August 12, 2009

நிழல் நாட்கள்


நினைவுகள் சுமந்தேன்
நிஜவுலக கனவுகளாய்
கற்பனை குதிரைதனில்
தொலைந்தன நாட்கள்
கண்ணிற்கு அந்நியனாகி சிந்திய கண்ணீர்
கருவறை திரும்ப ஏங்கும் உள்ளம்
மறுமுறை பிறந்து செய்திட்ட தவறினை
தடம் புரண்ட பாதைதனை
இடம் பெயர்த்து நல்வழிநடத்த
உடலுக்கு அந்நியனாகா உயிரை உரசி
தீயாய் தீமை அழித்திட
நன்மை பெருகிட
நல்லோர் வாழ்த்திட
நானும் வாழ வழி தேடி
என்னையே தோண்டி தோண்டி
மாயப்பூட்டின் சாவி தன்னை
என்னுள்ளும் தேடி தேடி திரிகின்றேன்
உறை உடைத்து புதிய
வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
நினைவுகள் சுமந்தேன்

Tuesday, August 11, 2009

நட்சத்திரம்


படர்ந்த வானத்தின்
சிறந்த கோலத்தில்
வரைந்த மாற்றத்தின்
இரவு நேரத்தில் மலர்ந்தவன் !!!

இருளை அலங்கரித்து
ஒளியாய் இருள் அகற்றி
கவிக்கு விருந்தளித்த
கோலத்தின் புள்ளியாய் ஜொலிப்பவன் !!!

வானின் உயரம் தன்னை
மானிடர் கண்டிட -
மெய்பித்து காட்டிடும்
வான் வரைந்த ஓவியமாய்
மேகத்தின் ஊடே
கண் நிறைந்த காவியமாய்
கவியின் ஊடே
வான் நிறைந்து நிற்கும் - நட்சத்திரம் !!!

Tuesday, August 4, 2009

Rakshabandhan


The day has blessed -
To bridge with you
The time has passed -
With smiles on you!!

I found my heart -
Blessing with god
One as brother - and
The other as sister
This day has special -
That is not in other
Rather then ever -
I care being together
With the lovely weather -
And the relation as power!!

The day has come -
Remains the same
Love the life
Live with your - lovely
Beings together!!

Monday, August 3, 2009

நண்பன்


பூக்களும் முர்க்களுமாய்
தென்றலும் கவிதையுமாய்
நெடுந்தூர பயணத்தில்
கானல் நீர் கண்டு -
கண்ணில் நீர் கொண்டு
தள்ளாடி நான் சாய்கையில்
ஆலமர நிழலாய் என் நண்பனின் தோள் !!

துயரங்கள் மாறவில்லை
புறமுதுகு புண்கள் மறையவில்லை
கண்ணில் நான் கொண்ட நீர் மட்டும்
காற்றோடு கறைந்து போனதே - நண்பா
உன்கரம் எனக்காக நீண்டபோது !!

இன்றும் யுத்த களத்தில்
விட்ட மூச்சு விட்டதாகும் வரை
மாறாத நட்போடு மறையாத அன்போடு
வந்த பாதை மறவாமல் -
வரும் பாதை எதிர்நோக்கி
நிகழ் பாதை நிஜமாய் -
நிழலாய் நம் நட்போடே
நடைபோடும் எடை இல்லா நட்பு !!

Sunday, August 2, 2009

Live Your Life


Life is not a war
To fight with sword
The chances are rare
Utilize it before it is far!!!

Day gets Light – when
The sun rise
Life gets light – when
Your soul rise!!!

Feel your birth
To make it worth
Life is to live
Live it with love!!!

பூ


இடித்து விழுந்தான் இடியவன்
மண்ணில் புதைந்தான் மழையவன் -
புதைந்தவன் எழுந்தான் செடியாக
செடியவள் பெற்றால் பூக்களாக !!

பூஞ்சோலை சாலை ஓரம்
இக்காட்சி நடந்தேற - சோலையோர
தென்றல் வந்து சொன்னது
எந்தன் காதின் ஓரம் !!