Tuesday, August 11, 2009

நட்சத்திரம்


படர்ந்த வானத்தின்
சிறந்த கோலத்தில்
வரைந்த மாற்றத்தின்
இரவு நேரத்தில் மலர்ந்தவன் !!!

இருளை அலங்கரித்து
ஒளியாய் இருள் அகற்றி
கவிக்கு விருந்தளித்த
கோலத்தின் புள்ளியாய் ஜொலிப்பவன் !!!

வானின் உயரம் தன்னை
மானிடர் கண்டிட -
மெய்பித்து காட்டிடும்
வான் வரைந்த ஓவியமாய்
மேகத்தின் ஊடே
கண் நிறைந்த காவியமாய்
கவியின் ஊடே
வான் நிறைந்து நிற்கும் - நட்சத்திரம் !!!

No comments:

Post a Comment