Wednesday, August 12, 2009

நிழல் நாட்கள்


நினைவுகள் சுமந்தேன்
நிஜவுலக கனவுகளாய்
கற்பனை குதிரைதனில்
தொலைந்தன நாட்கள்
கண்ணிற்கு அந்நியனாகி சிந்திய கண்ணீர்
கருவறை திரும்ப ஏங்கும் உள்ளம்
மறுமுறை பிறந்து செய்திட்ட தவறினை
தடம் புரண்ட பாதைதனை
இடம் பெயர்த்து நல்வழிநடத்த
உடலுக்கு அந்நியனாகா உயிரை உரசி
தீயாய் தீமை அழித்திட
நன்மை பெருகிட
நல்லோர் வாழ்த்திட
நானும் வாழ வழி தேடி
என்னையே தோண்டி தோண்டி
மாயப்பூட்டின் சாவி தன்னை
என்னுள்ளும் தேடி தேடி திரிகின்றேன்
உறை உடைத்து புதிய
வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
நினைவுகள் சுமந்தேன்

No comments:

Post a Comment