Thursday, August 27, 2009

புதியதாய் பிறந்தேன்


தினம் தினம் காலை
கண் திறக்கும் வேளை
புதிதாய் தான் பிறந்தேன் !!!

விடை பெற்று சென்ற சிரிப்பினை
விலை கொடுத்து வாங்கி
வழிய சிரிக்கும் வேலையாய் ஐ.டி !!!

மனிதன் எனும் போர்வையில்
மலரும் இயந்திரமாய்
குடும்ப சூழலிற்காக
வாசமற்ற மலர்களாய் !!!

என்றாவது நம் வாழ்கையிலும்
விடியலாய் நாட்கள் வரும்
என்ற தொலைநோக்கு பார்வையில்
துளைந்திடும் ப்ரொபெஸ்நல்ஸ் !!!

இதுவும் கடந்து போகும்
என்ற வாக்கியத்தை ஓடவிட்டு
வாழ்கையின் ஓட்டமும் தொடர்கிறது
வினாக்களின் விடையும் தொடர்கதையாய்
முடிவின்றி எடை கூடி தான் சுமக்கிறோம் !!!

முடிவில் படுக்கையில் என் பிராத்தனை
இறைவா மரண வரம்தா !!
இறந்தேன் அணைத்து வழிகளும் புதைய
மீண்டும் பிறந்தேன் மறுமுறை - புதிதாய்
வாழ்கை பயணத்தில் தொடர்கின்றேன்
மறுமுறை எழாத மரணம் வரும் வரை
தேடல்களோடே ஒவ்வொரு நாளும்
புதியதாய் தான் பிறந்தேன் !!!

1 comment:

  1. ///முடிவில் படுக்கையில் என் பிராத்தனை
    இறைவா மரண வரம்தா !!
    இறந்தேன் அணைத்து வழிகளும் புதைய
    மீண்டும் பிறந்தேன் மறுமுறை - புதிதாய்
    வாழ்கை பயணத்தில் தொடர்கின்றேன்
    மறுமுறை எழாத மரணம் வரும் வரை
    தேடல்களோடே ஒவ்வொரு நாளும்
    புதியதாய் தான் பிறந்தேன் !!! ///

    arthamulla varigal..
    thodarnthu elutha valthukkal..!

    ReplyDelete