Tuesday, July 21, 2009

ருத்ரம்


அங்கம் நடுநடுங்க -
நெஞ்சம் படபடக்க -
என்னுள் இருந்தவன் -
வெளிவந்தான் !!

என் எதிரே நின்றவரும் -
துரோகம் இளைத்தவரும் -
விழிகள் பிதுங்கி - ஓடி
ஒழிகின்றார் !!

யுத்தம் வளர்ப்பதில் -
நித்தம் தயங்கியே -
தாமரை இலை நீர் - போல்
நின்றேன் !!

பொறுத்த தீப்பொறி -
பொறுமை துறந்ததால் -
வெடிக்கும் எரிமலையாய் -
வந்தேன் !!

ருத்ரன் நான் வந்தேன் !!

1 comment: