Wednesday, July 15, 2009

சொல்லாமல்


தென்றல் சுமந்து வந்த -
பூவை !
மெல்லத் தாங்கி -
கையில் பெற்றேன் !!

சொல்லத் தயங்கி நின்ற -
வார்த்தை !
செல்லச் சிரிப்பில் சிறை பிடித்த -
பெண்ணே !!
சொல்லத் துணிந்து -
நானும் வந்தேன் !
சொல்லாமல் கடந்து -
சென்றேன் !!

சொட்டும் கண்ணீர் வாழ்த்தி -
நின்றேன் !
செல்வச் செழிப்புடன் நடந்தேறிய -
உன் திருமணத்தில்!!!

2 comments: