Tuesday, July 21, 2009

புதிய முகம்


மேகமே வானமாக - தென்றலின்
தழுவலில் நகர்ந்த மேகத்தின் ஊடே
வானின் கண்களாய் நட்சத்திரங்கள் !!!

சற்று மிதமான அமைதியை -
அலங்கோலமாக்கிய கதரல் சத்தம் !!!

வெடிக்கின்ற யுத்தத்தில் வெடித்துச்சிதறிய
புகையே அங்கு மேகம் போல் காட்சிதர -
புகையின் ஊடே துப்பாக்கி குண்டுகள்
நட்சத்திர ஒளியோடு உயிரினை பதம்பார்க்க !!!

புயலுக்குப்பின் அமைதியாய் - அலங்கோலமான
என் ஈழத்தமிழன் கதரல் சத்தம் !!!

உண்மை நிலையறியாமல் யுத்தத்தை
அரசியல் யுக்தியால் மறைத்த கொடுமை
இறந்த என்னவர் உணரக்கூடுமோ -
உண்மை ஊமையாகுமோ !!!

பிறந்த போதே இறக்க
கையொப்பம்மிட்டே பிறந்தோம் -
தோழா அடிமையெனில்
இனி பிறக்க யாவரும் மறப்போம் !!!

உண்மையின் கீதம் சற்று
ஊமையும் ஆகும் - இருந்த போதும்
உரிமை கீதம் ஊமையாக்கா வண்ணம்
மீண்டும் மலரும் புதிய முகம் -
முகமூடி அகற்ற படும் !!!

4 comments:

  1. பிறந்த போதே இறக்க
    கையொப்பம்மிட்டே பிறந்தோம் -


    Really Super da...

    Keep on going.....

    ReplyDelete
  2. good one ...:)
    hope dis world will become a better place to live ....

    ReplyDelete
  3. அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete