Thursday, July 30, 2009

தசை யாடும் உறவு



பிறை சூடி கவிபாடி -
எழுகின்ற தமிழர் கோடி
அதன் ஆழம் தோண்டி -
திசை எட்டும் முரசடி !!
உண்மை உணர்த்திட -
உயர்த்திடு போர்க்கொடி !!

என்னவன் என்ற போதும்
வேற்றவன் என்று கூறி -
வேடர்கள் வேட்டையாட
வேடிக்கை பார்த்துநிற்கும் -
வேதனை நிர்வாணத்தால்
நிர்முலமாகி நிற்கும் என்சார் தமிழன் !!
இலங்கையில் இறந்தபின்னும்
பிறப்பெடுத்த அவசியமென்ன ?

பிறப்பெடுத்து மண்தொட்ட போதே -
உறை வாளெடுத்து போரிட்ட தமிழன் !!
சிறைப்பட்ட பின்னும் உறுமி -
குரல் கொடுத்த கலைஞன் !!
இனம் என்ற போதே
சினம் கொண்டு சீறி -
எழுகின்ற இளைஞன் !!
உரிமை குரல் கொடுத்து -
உணர்வினை முடிக்கிவிடும் கலைஞன் !!
என அனைவரும் அணிவகுத்து நின்றும்
நரியின் சத்தத்தில் சிங்கம் தோற்றிட்டதோ !!

திசை மாறிய போதும்
தசை யாடும் உறவு -
தள்ளாடி போனதால்
தாலாட்டு துலைந்து போனதே !!
இடுகாடு நிறைந்து போனதே !!

இயற்றிட்ட வார்த்தையின்பால்
நான் கொண்ட நட்பின் பசி -
இனி இறைதேடி கவிபாடும்
ஒரு கவிஞனாய் என் போர்க்கொடி !!!

2 comments:

  1. Super machi.....
    Tamilan endru sollada thalai nimirndu nillada
    Arasu...
    King of the world.

    ReplyDelete
  2. தலை நிமிர வேண்டும்
    நம் முரசுக்கு நீ உயர்த்திய சப்தத்திற்கு
    நன்றி அரசு

    ReplyDelete