Monday, July 20, 2009

மழலை


சின்ன விழி மூடி
தென்றல் கவிபாடி
அன்னை கரம் தொட்டு
தந்தை மனதோடு தூங்கும்
என் செல்வமே !!

நீ கொஞ்சும் மொழி பேசி
பூவின் இதழ் சிறித்து -
சிந்தும் சிறிப்போடு
உள்ளம் கொள்ளை போனதே!!

தந்தை தோல் மீது
அன்ன நடையிட்டு
பிஞ்சு கால் செல்ல
நெஞ்சம் நெகிழ்கின்றதே !!

கவிகள் பல கோடி
மழலை உனைப்பாடி
வரிகள் பல கோடி -
இயற்ற முடியாமல்
தொடரும் கவிப்பாடலே !!

உன்னை பெற்றதால் - பெற்றிட்டேன்
வாழ்வின் அர்த்தங்களை !!

4 comments: