Tuesday, July 14, 2009

சாதி


தீண்டும் பாம்பின் விஷமும்
இவன் சுவாசம் நேசம் கொல்லும்!
பார்வை படர்கின்ற பக்கம்
அழுகை சத்தத்தின் யுத்தம்!!

விதியையும் வெல்லும் மதியை
மயக்கும் மாயை இருளை நீக்கிடு
மதியாமல் மிதிக்கும் கால்களை களையெடு!!

எழுதுகோல் கொண்டு உரைத்தோம்
மனிதா ஊன்றுகோல் என்றும் உன்னை
ஊமையாக்கி விடும் தோழா!!

சிறு வட்டத்தை உடைத்து வாடா
மனித குலம் என்று வாடா
விழுகின்ற போதும் மண்ணில்
சாதி வேர் அறுத்து போடா!

2 comments: