Monday, August 3, 2009

நண்பன்


பூக்களும் முர்க்களுமாய்
தென்றலும் கவிதையுமாய்
நெடுந்தூர பயணத்தில்
கானல் நீர் கண்டு -
கண்ணில் நீர் கொண்டு
தள்ளாடி நான் சாய்கையில்
ஆலமர நிழலாய் என் நண்பனின் தோள் !!

துயரங்கள் மாறவில்லை
புறமுதுகு புண்கள் மறையவில்லை
கண்ணில் நான் கொண்ட நீர் மட்டும்
காற்றோடு கறைந்து போனதே - நண்பா
உன்கரம் எனக்காக நீண்டபோது !!

இன்றும் யுத்த களத்தில்
விட்ட மூச்சு விட்டதாகும் வரை
மாறாத நட்போடு மறையாத அன்போடு
வந்த பாதை மறவாமல் -
வரும் பாதை எதிர்நோக்கி
நிகழ் பாதை நிஜமாய் -
நிழலாய் நம் நட்போடே
நடைபோடும் எடை இல்லா நட்பு !!

3 comments: