Sunday, July 22, 2012

ஆலமரம்

கதிரவன் கண் மலரும்
    பொன்வான ஒளியின் கீழ்
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும்
     நதியோர கரையோரம் !!
காதலால் வருடாமல் வருடி செல்லும்
    காற்றில் மெருகேற்றிய இசையின் கீதம் !!
வரும் திசை நோக்கிய பாதையில்
     சூரியனும் ஒளிகூட்ட
பலகிளைகள் தாலாட்ட
    பல பறவைகள் இசை மீட்ட
பல கைகள் மன்புதைந்து
   வான் தொட உயர்ந்து நிற்கும்
 ஆலமரம் !!

என் நினைவு தொட
என் உணர்வுக்கு எட்டும் உவமையாய்
என் அம்மை அப்பனே !!

No comments:

Post a Comment