Wednesday, February 24, 2010

அண்ணன்


ஒரு துளியாய் ஒரு விதையாய்
என் நிழலாய் என்னோடு தொடர்கின்றவன்
என்முன்னே பிறந்திட்டான்
அவன் உயிராய் காதிட்டான் !!

அடித்து விளையாடி
திட்டி உரையாடி
அழுது அடம்பிடித்து
நான் ஜெயித்திடும் விளையாட்டில்
சலிக்காமல் தோற்று
தோல்வியில் வெற்றி காணும் ஒரு ஜீவன்!!

நான் செய்திடும் குறும்புகளை
அன்னை இடம் முறையிடுவான்
அன்னை வந்து முறைத்திடுவாள்
தந்திரமாய் வலைபின்னி
நானோ தந்தை கை நாடிடுவேன் !!

இத்தனை முறை நான் ஜெயித்திட
அண்ணன் அவன் தோள்தந்தான்
இல்லமதில் நான் நானாக
பிரதி பலிக்கும் நண்பனானான்
நான் நடக்கும் பாதை தனில்
முள்ளகற்றும் சகோதரன்
என் அண்ணன் !!

No comments:

Post a Comment