
பிறை சூடி கவிபாடி -
எழுகின்ற தமிழர் கோடி
அதன் ஆழம் தோண்டி -
திசை எட்டும் முரசடி !!
உண்மை உணர்த்திட -
உயர்த்திடு போர்க்கொடி !!
என்னவன் என்ற போதும்
வேற்றவன் என்று கூறி -
வேடர்கள் வேட்டையாட
வேடிக்கை பார்த்துநிற்கும் -
வேதனை நிர்வாணத்தால்
நிர்முலமாகி நிற்கும் என்சார் தமிழன் !!
இலங்கையில் இறந்தபின்னும்
பிறப்பெடுத்த அவசியமென்ன ?
பிறப்பெடுத்து மண்தொட்ட போதே -
உறை வாளெடுத்து போரிட்ட தமிழன் !!
சிறைப்பட்ட பின்னும் உறுமி -
குரல் கொடுத்த கலைஞன் !!
இனம் என்ற போதே
சினம் கொண்டு சீறி -
எழுகின்ற இளைஞன் !!
உரிமை குரல் கொடுத்து -
உணர்வினை முடிக்கிவிடும் கலைஞன் !!
என அனைவரும் அணிவகுத்து நின்றும்
நரியின் சத்தத்தில் சிங்கம் தோற்றிட்டதோ !!
திசை மாறிய போதும்
தசை யாடும் உறவு -
தள்ளாடி போனதால்
தாலாட்டு துலைந்து போனதே !!
இடுகாடு நிறைந்து போனதே !!
இயற்றிட்ட வார்த்தையின்பால்
நான் கொண்ட நட்பின் பசி -
இனி இறைதேடி கவிபாடும்
ஒரு கவிஞனாய் என் போர்க்கொடி !!!
Super machi.....
ReplyDeleteTamilan endru sollada thalai nimirndu nillada
Arasu...
King of the world.
தலை நிமிர வேண்டும்
ReplyDeleteநம் முரசுக்கு நீ உயர்த்திய சப்தத்திற்கு
நன்றி அரசு